', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    முதியவர்கள் அறயை ஒழுங்குபடுத்துங்கள்!


    முதியவர்கள் அறயை ஒழுங்குபடுத்துங்கள்!

    வீட்டின் அறைகளை விதவிதமான அலங்கார பொருட்களை கொண்டு அழகுபடுத்தினாலும் வீட்டில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்க வேண்டும். குறிப்பாக வீட்டில் வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்கு ஏற்ப அறை வடிவமைக்கப்பட வேண்டியது அவசியம்.


    தரையில் கவனம்

    அவர்களுக்கு தனியாக அறை இருக்கும் பட்சத்தில் அவர்கள் பயன்படுத்துவதற்கு சவுகரியமாக இருக்குமாறு அறையை மாற்றி அமைக்கலாம். முக்கியமாக தரைத்தளத்தை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அறையை அழகுபடுத்துவதில் டைல்ஸ்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றாலும் அவை முதியவர்கள் நடப்பதற்கு ஏதுவாக இருக்க வேண்டும்.

    அதனால் வழுக்கும் தன்மை கொண்ட பளபளப்பு டைல்ஸ்களை முதியவர்கள் அறையில் பதிப்பதை தவிர்த்து விட வேண்டும். அத்தகைய டைல்ஸ்கள் முதியவர்கள் நடப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். காலிலோ, தரையிலோ ஈரப்பதம் படிந்திருக்கும்போது நடந்தால் வழுக்கி விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அது அவர் களின் உடல் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்க செய்துவிடும்.

    சொரசொரப்பு தன்மை

    ஆகையால் டைல்ஸ் பதிப்பதாக இருந்தால் சொரசொரப்பு தன்மை கொண்ட டைல்ஸ்களையே முதியவர்கள் பயன்படுத்தும் அறைகளில் பதிக்க வேண்டும். அதுபோல் குளியல் அறையிலும் சொரசொரப்பு தன்மை கொண்ட டைல்ஸ்களையே இடம்பெற செய்ய வேண்டும். அங்கு ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் வழவழப்பு தன்மை கொண்ட டைல்ஸ்களை பதிக்கக்கூடாது. நடக்கும் போது கால்களுக்கு பிடிப்பு தன்மையை கொடுக்கும் வகையில் டைல்ஸ்கள் தேர்வு இருக்க வேண்டும்.

    மேலும் குளியல் அறையை முதியவர்கள் எளிதாக பயன் படுத்தும்படி வடிவமைக்க வேண்டும். தண்ணீர் குழாய்கள் அவர்கள் சிரமப்படாமல் திறந்து மூடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். அவர்கள் சிரமமின்றி நடந்து செல்வதற்கு ஏதுவாக கைபிடிகளை அமைக்க வேண்டும். கழிவறையிலும் மேற்கத்திய பாணி (வெஸ்டன் டாய்லட்) கழிப்பிடங்களை அமைப்பது நல்லது.

    அலமாரியில் மாற்றம்

    முதியவர்கள் பயன்படுத்தும் அறைகளில் அலமாரிகள் அதிக உயரத்தில் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். அவர்கள் பொருட்களை எடுப்பதற்கு சிரமமில்லாத வகையில் இருக்க வேண்டும். அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை தனியாக அலமாரியின் கீழ்பகுதியில் வைப்பதற்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அல்லது மேஜையுடன் இணைந்த டிராயர்களை முதியவர்கள் பயன்படுத்தும்படி மாற்றி அமைக்கலாம். அவை பொருட்களை எடுத்து பரிமாறுவதற்கு சவுகரியமாக இருக்கும்.

    மாடிப்படிக்கட்டுகளையும் அதிக உயரத்தில் அமைக்கக்கூடாது. ஒரு படிக்கட்டுக்கும், அடுத்த படிக்கட்டுக்கும் இடையே உள்ள உயரம் அவர்கள் எளிதாக ஏறி, இறங்குவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். படிக்கட்டு சுவர்களில் அமைக்கப்படும் கைப்பிடிகள் வழுக்கும் தன்மை கொண்டவையாக இருக்கக்கூடாது. படிக்கட்டு தரையிலும் டைல்ஸ் பதிப்பதை தவிர்க்க வேண்டும்.


    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.