', woeid: '', unit: 'f', success: function(weather) { html = '
  • '+weather.city+', '+weather.country+' '+weather.temp+'°'+weather.units.temp+'
  • '; $("#weather").html(html); }, error: function(error) { $("#weather").html('

    '+error+'

    '); } }); }); //]]>

    Header Ads

    Breaking News
    recent

    அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கும் செங்குன்றம்


    அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கும் செங்குன்றம்



    பதிவு செய்த நாள் : Apr 12 | 01:00 am



    சென்னை புறநகர் பகுதிகளில் வணிக பயன்பாட்டுடன் குடியிருப்புகளும் பெருகி வரும் பகுதியாக விளங்குகிறது செங்குன்றம். நகர்புறத்தையொட்டிய முக்கிய பகுதிகளில் குடியிருப்புகள் நெருக்கமாகிவிட்ட நிலையில் அதன் எல்லைகள் விரிவாக்கம் அடைந்து வருகின்றன. அதனால் அந்த பகுதிகளில் குடியிருப்புகள் முளைந்த வண்ணம் இருக்கின்றன.

    சொத்துமதிப்பு குறைவு

    புழல் ஏரிக்கு அருகில் உள்ள பகுதியாக விளங்குவதால் அதன் வளர்ச்சி ஏறுமுகமாகவே இருக்கிறது. அத்துடன் ஆங்காங்கே அமைந்திருக்கும் தொழில் நிறுவனங்களும் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்கின்றன. புறநகர் பகுதியில் அமைந்திருந்தாலும் நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் சாலை வசதிகளை பெற்றிருக்கிறது. அண்ணாநகர், அம்பத்தூர், பெரம்பூர் பகுதிகள் இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்தாலும் அவைகளை துரிதமாக சென்றடையும் வகையில் சாலை வசதி மேம்பாடு அடைந்திருக்கிறது.

    மேலும் அந்த பகுதிகளை ஒப்பிடும்போது செங்குன்றம் பகுதியின் பல இடங்களில் சொத்து மதிப்பு குறைவாக இருக்கிறது. அம்பத்தூர் பகுதியில் 1000 சதுர அடி கொண்ட வீட்டின் விலை ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் அதே சதுர அடி கொண்ட இரண்டு படுக்கை அறை வீடு செங்குன்றம் பகுதியில் ரூ.30 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

    வாங்குவதற்கு ஆர்வம்

    முக்கிய பகுதியாக இருந்தால் சொத்து மதிப்பு இதை விட அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் அண்ணாநகர், அம்பத்தூர், பெரம்பூர் பகுதிகளை விட விலை குறைவாகவே இருக்கிறது. இதுவே செங்குன்றம் பகுதியில் பலரை சொத்து வாங்க தூண்டும் முதன்மை காரணமாக இருக்கிறது. இது தவிர சமூக கட்டமைப்பு வசதிகளும் சொத்து வாங்கும் ஆர்வத்துக்கு கை கோர்ப்பதாக இருக்கிறது.

    செங்குன்றத்தை சூழ்ந்திருக்கும் பகுதியில் அமைந்திருக்கும் வர்த்தக நிறுவனங்கள் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கின்றன. எந்த பொருட்களையும் வாங்க முக்கிய நகரங்களை நாட வேண்டிய அவசியமில்லாத வகையில் சில கிலோ மீட்டர் தொலைவிலேயே அவை கிடைக்கும் வகையில் இருக்கின்றன. முக்கியமாக மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட சகலவிதமாக கட்டமைப்பு வசதிகளையும் அருகில் பெற்றிருக்கும் பகுதியாக விளங்குகிறது. இத்தகைய காரணங்களும் செங்குன்றம் பகுதியில் பலர் சொத்து வாங்குவதற்கு தூண்டுகோலாக இருக்கிறது.

    முதலீடு நோக்கம்

    அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் மட்டுமின்றி சொகுசு ரகத்தை சார்ந்த வில்லா வகை வீடுகளும் சில பகுதிகளில் அமைந்திருக்கின்றன. வீடுகளின் வடிவமைப்பை பொறுத்து சதுர அடி மதிப்பு ரூ.3 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. இதுதவிர ஆங்காங்கே சில இடங்களில் வீட்டுமனைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. அவை முக்கிய பகுதிகளில் குறைந்த பரப்பளவிலேயே இருப்பதால் அதன் விலை மதிப்பு அதிகமாக இருக்கிறது. எனினும் வீட்டுமனைகள் வாங்குவதற்கும் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள். வரும் காலங்களில் அதன் விலை மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது.

    அதனால் முதலீடு நோக்கத்தில் இருப்பவர்களும் செங்குன்றம் பகுதியை தங்கள் தேர்வு பட்டியலில் இடம்பெற செய்துள்ளனர். செங்குன்றம் பகுதிக்கு அருகில் செல்லும் புறவழி சாலைகளும் சொத்து மதிப்பு உயர்வில் பங்கெடுத்துக்கொள்கின்றன. அதன் தாக்கமாக சொத்து மதிப்பு உயர்வை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்பதால் முதலீடு நோக்கர்களுக்கு ஏற்ற பகுதியாக விளங்குவதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டும், வீடு வாங்க விருப்பப்படுபவர்களை கணக்கிட்டும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங் களின் அடுக்குமாடி கட்டுமான திட்டங்கள் செங்குன்றம் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    கருத்துகள் இல்லை:

    Copyraight@nammaveedu. Blogger இயக்குவது.